Tuesday, September 9, 2014

நான் யார்?

குட்டக் குட்டக் குனிவதனால்
நான் முட்டாளில்லை...
குனிந்து தரையில் வீழ்வதனால்
நான் கோழையுமில்லை...
மட்டந்தட்டிப் பேசுவோரிடம்
மார்தட்டி வீரம் காட்ட
நான்
மீசை வைத்த ஆண் பிள்ளையுமில்லை...

ஒரு வார்த்தை வீசுதற்கு
ஒரு நொடியும் ஆகாது;
ஆயினும்,
வீசியதைப் பிடிக்கும் வலை
இவ்வுலகில் எங்குமில்லை
என்றுணர்ந்த
சாதாரண பெண்தான் நான்...

--கவிநயா

படத்துக்கு நன்றி: http://arouna-selvame.blogspot.com/2013/08/blog-post.html
(அந்தக் காலத்தில், 2005-ல் எழுதியது, இப்பவும் சரியாதானே இருக்கு? :)